Wednesday, March 28, 2012

புற்று நோய்



உலக மக்கள் அஞ்சி நடுங்கும் நோய்களில் ஒன்று தான் புற்று நோய். இதற்கு காரணம் தெரிந்து கொள்ள முடியாமல் பகுமுறை மருந்துவமும்(ஆங்கில மருத்துவம்) தனது தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளது. நோய்களுக்கு கிருமிகளே காரணம் என்ற தனது புளுகு மூட்டையை தானே "இல்லை" என்று புற்று நோய்யிடம் மண்டியிடுகிறது.
1,47,117 வருடங்களுக்கு முன் திருஆவினன்குடியில் வாழ்ந்த  குறுமுனி என்னும் அகத்தியர் தனது "பரிபூரணம்" என்னும் நூலில் புற்று நோய்க்கான காரணத்தை நன்கு  விளக்கியுள்ளார்கள். அவற்றை சுருக்கமாக

"கனத்த வாயுவதனால் குன்மம் ஆச்சு
கரைகடந்த போகத்தால் மேக மாச்சு
கண்துஞ்சும் லாகிரியால் பித்த மாச்சு
கண்ட இது மூன்றுமே கதித்து புற்றாச்சே"


                                                     என்கிறார்.

அதிக வாயு பொருட்களை உண்பதால் குன்மம் என்னும் வயிற்று புண்கள், வரைமுறை இல்லா உடலுறவு மூலம் மேகம் ( காற்று + வெப்பம் = அமிலம்) அதிகரித்து உடலில் புற்று நோயை உணடாக்குகிறது என்றும் ,இலாகிரி என்னும் போதை மற்றும் மது பானங்களால் பித்தம் அதிகரித்து புற்று நோயை உண்டாக்குகிறது என்கிறார்.  சித்த மருத்துவத்தில் புற்று நோய் 4 வகையாக பகுத்து கூறப்படுகிறது. அவையன இலிங்கபுற்று, யோனிபுற்று, பரவல் புற்று, அழுகல் புற்று என்பன. இலிங்கபுற்று- வெளி நோக்கி வளருவது, யோனி புற்று- உள் நோக்கி வளருவது, அழுகல் புற்று- அழுகல் உண்டாகி நீர் கசிவது (குஷ்டம்). மேலும் இந்த தன்மை ஏற்பட்டு எந்த உறுப்பையோ, தாதுக்களையோ  பாதிக்கும் என்றால் அதன் பெயரால் அழைக்கபடுகிறது( கன்ன புற்று, நாக்கு புற்று, ஆண்குறி புற்று...) சித்த மருத்துவத்தில் மொத்தம் 143  இனங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான விளக்கம், மருந்துகள், உணவுமுறை விளக்கபடுகின்றன. இவற்றை விரிவாக காண்போம்.

(1).  வாயு பொருட்களை உண்பதன் மூலம் வயிற்றில் வாயு உண்டாகி அது குடல், வயிறு, உள்ளுறுப்புகள் இவற்றில் ஒரு வகையான உராய்வை ஏற்படுத்தி புண்களை ஏற்படுத்துகின்றன. இதுவே குன்மம் எனப்படும் .இவை நீண்ட காலம் இருக்குமாயின் புற்று நோயாக மாறும். இவைதான் கல்லீரல், இரைப்பை, குடல் புற்றுகள்.

(2) அதிக உடலுறவின் மூலம் ஆண்கள், பெண்களுக்கு  பிறப்புறுப்புகளில் புற்று ஏற்படுகின்றது. உடலுறவில் ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் உராய்வின் மூலம் புண்கள் ஏற்படுகின்றன. இவை இரணமாக  மாறி புற்றாக மாறும். ஆண்களுக்கு உறுப்புகள் வெளியே இருப்பதால் சிகிச்சை எளிதாகிறது. பெண்களுக்கு மறைவாக இருப்பதால் சிகிச்சை கடினம். ஆண், பெண் சுய இன்பத்தால் புற்று நோய் உண்டாகிறது. விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் சில பெண்களின் உணர்ச்சிக்கு வயப்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளபட்டு, உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, விடமுடியாமல் பெண்குறி புற்று, கருப்பை புற்று, கரு குழாய் புற்று ஏற்படுத்திக் கொள்கின்றனர். விடுதிகள் நோய்களின் கூடாரமாக இருக்கின்றன. உயர் கல்வி பெற்ற பெண்களும் இதில் தள்ள பெற்று மடிகின்றனர். இதை மருத்துவர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஏராளம். இதனால் ஆண்களை வெறுக்கும் பெண்கள் அதிகம். காமத்தினால் பெண்களின் மார்பகங்கள் கசக்கப் படும் போது மார்பக தசைகளில் உராய்வு ஏற்பட்டு புண்ணாகவும் மீண்டும் மீண்டும் இந்நிகழ்வால் இரணம் உண்டாகி புற்றாகிறது.

(3) இலாகிரி என்னும் போதை பொருட்களாலும், மது பானத்தாலும், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சீரண உறுப்புகள், குடல்கள், மூலம் இவற்றில் புண்கள் ஏற்பட்டு கால நீட்டிப்பால் புற்று நோய் ஆகிறது.

(4) அதிக கவலை, அழுகை, கோபம், பொறுமை இன்மை ,காதல், வெறுப்பு இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இரணம் உண்டாகிறது. இதுவே பிற்பாடு புற்றாகும். சொற்கள் கூட புண்ணை உண்டாக்கும். இதை வள்ளுவர் "நாவினால் சுட்ட வடு" என்கிறார். நீண்ட கால புண்கள் இரணமாக மாறி புற்று நோயாக மாறும் என்பதை கண்டோம். அது போல் தலையில் அடிபட்டாலும், உடலில் அடிபட்டு நீண்ட காலம் ஆறாத புண்கள் இருக்குமேயானால் அவைகளும் பிற்காலத்தில் புற்று நோயாக பரிணாமம் செய்யும். இராசாயண கூடம், நகல் எடுக்கும் இயந்திரம், ஆசிரியர்கள், கதிர்வீச்சு கூடங்கள், கணிப்பொறி ,மின்கலங்கள், கொதிகலங்கள், பற்ற வைப்பு, சோதனை கூடங்கள், ஆய்வகங்கள் இவற்றில் வேலை செய்வோருக்கும் புற்று நோய் வரும்.

சிகிச்சை முறை


 ஆங்கில வைத்தியத்தில் அறுவை, கதிர் வீச்சு முறை, விசத்தை உட்செலுத்துதல்(கீமோ) முறைகள் பின்பற்றபடுகின்றன. அவைகள் புற்று நோயின் காரணமான புண்கள் அல்லது இரணம் அதிகரிக்கவே செய்கின்றன. இதனால் புற்று நோய் அதிகரித்து ஒரு சதவிகித நோயாளிகள் கூட பிழைப்பது என்பது முடியாது போகிறது.

சித்த மருத்துவம்


பழந்தமிழ் மருத்துவம் இவற்றை தெளிவாக ஆராய்ந்து சிகிச்சை முறைகளை தந்துள்ளது. இதனால் எத்தனையோ பேர் முழுமையாக குணம் பெற்றுள்ளனர். ஆங்கில வைத்தியமுறைக்கு சென்று முதிர்ந்த நிலையில் வருவோரும், பத்தியம் என்றவுடன் ஓட்டம் பிடிப்போரும், மரபு என்று சில பழக்க வழக்கங்களை கொண்டோரும், நாகரிகம் என்ற பெயரில் உண்மையை மறைப்போரும், வைத்தியரை தனக்கு சாதமாக நடத்த முனைவோரும், அதிகம் படித்தோரும், பொறுமை இல்லாதவருக்கும் சிகிச்சை செய்வது கடினம். சித்த மருத்துவ முறையில் நாத செந்தூரம், இரச பதங்கம், கெளரி பதங்கம், நவலோக பரிபூரண செந்தூரம், பஞ்சலோக செந்தூரம், அய-தாமிர செந்தூரம், தங்க நீறு, வெள்ளி நீறு, உலமகத்துவ செந்தூரம் முதலிய மருந்துகளால் ( எனது பரம்பரை அனுபவம்) புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்

"வெந்த மருந்தே வினை தீர்க்கும்"   - பழமொழி

"விடாது வினை தருமத்தின் கணை
அடாத செயலுக் குள்ளே ஒளிந்து
கெடாமல் வளரும் அதற்கு தருமலாதனும்
கட்டலா காதே அணை"

                                           யூகிமுனி

"செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைவு இருக்க
பயன் என்ன தவறிழைத்து பின் பரமனை வேண்டுவதால்"


                                                             வேதாத்திரி மகரிசி

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"


                                                          வள்ளுவர்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers